For Daily Alerts
Just In
செம்மரம் கடத்தலுக்கு உதவி : திருப்பதியில் தமிழக அரசு பஸ் டிரைவர் கண்டக்டர் கைது
செம்மரம் வெட்டுவதற்கு கூலி தொழிலாளிகளை அழைத்து வந்த தமிழக அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களை திருப்பதி போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி: திருவண்ணாமலை மாவட்ட கூலி தொழிலாளிகளை திருப்பதி வனப்பகுதியில் இறக்கி விட்ட தமிழக அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை திருப்பதி போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூரில் இருந்து திருப்பதி சென்ற அரசு பேருந்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் 36 பேரை கூடுதல் கட்டணத்திற்கு ஏற்றி சென்றுள்ளனர்.
அனைவரையும் திருப்பதி வனப்பகுதியில் இறக்கி விட்டனர். அப்போது அங்கு வந்த வனத்துறையினர் இது பற்றி கேள்வி எழுப்பினர். செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டிரைவர், கண்டக்டரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Comments
red sanders tirupathi driver arrest oneindia tamil video செம்மரம் கடத்தல் திருப்பதி ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
The Red Sanders Anti-Smuggling Task Force (RSASTF) under the Andhra Police has arreted Tamil Nadu State Transport Corporation bus driver and conducter, driver helping woodcutters ferry back from the forest areas of Chittor district.