For Daily Alerts
Just In
தமிழ் சிறுகதை எழுத்தாளர் சிவகுமார் திடீர் மரணம்
பெங்களூர்: பிரபல சிறுகதை எழுத்தாளர் க.சீ. சிவகுமார் வெள்ளிக்கிழமை மாலை பெங்களூருவில் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு வயது 46.
திருப்பூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகே கன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் க.சி. சிவகுமார். பத்திரிகைகளில் பணியாற்றியவர். ஏராளமான சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ள க.சீ சிவகுமார், கன்னிவாடி ஆதிமங்கலத்து விசேஷங்கள், குணச்சித்தர்கள், உப்புக் கடலை குடிக்கும் பூனை உள்ளிட்ட குறுநாவல்களையும் எழுதியுள்ளார்.
150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய இவர் சிறந்த சிறுகதைக்கான இலக்கிய சிந்தனை விருதையும் பெற்றவர். பெங்களூருவில் தான் வசித்து வந்த குடியிருப்பு தளத்தில் 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் அவர் மரணம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
Tamil Short story writer sivakumar died in bangalore
Story first published: Saturday, February 4, 2017, 23:35 [IST]