அமைதிக்கான நோபல் பரிசுக்கு மோடியின் பெயர் பரிந்துரை... தமிழிசை தகவல்!
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிமுகப்படுத்தினார். ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம் என்று இது அழைக்கப்படுகிறது.
பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த விழாவில் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் இந்தியா முழுக்க மொத்தம் 10 கோடி குடும்பங்கள் பயன் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் 5 லட்சம் ரூபாய் வரை ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு அளிக்கப்படும். இதுதான் உலகில் மிகப்பெரிய மருத்துவ திட்டம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
உலகின் பெரிய சுகாதார திட்டத்தை தொடங்கியதற்காக பிரதமர் பெயரை பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Please join me in nominating our visionary PM Modiji for Nobel Peace Prize 2019 for Launching the World's Largest Health Care Program#AyushmanBharat-"Pradhan mantri Jan arogya Yojana " which ensures access to quality Healthcare services for the underprivileged @PMOIndia @JPNadda
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) September 24, 2018
2019ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு மோடியின் பெயர் பரிந்துரை செய்ய இருக்கிறோம். மக்களும் மோடி வெற்றிபெறும் வகையில் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.