வாஜ்பாய் மரணம் நாட்டுக்கே பேரிழப்பு.. தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். பாஜகவின் முக்கிய தலைவரான இவர் 93 வயதில் மரணம் அடைந்துள்ளார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.
அவரது மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், வாஜ்பாய் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர்.அவரது மறைவு நாட்டுக்கே பேரிழப்பு.3 முறை நாட்டின் பிரதமராக இருந்தவர் வாஜ்பாய்.சிறந்த ஆட்சியாளர், கடின உழைப்பாளி வாஜ்பாய்.இலக்கிய ஆர்வம் கொண்டவர், சிறந்த பேச்சாளர். என்று இரங்கல் தெரிவித்துள்ளார்'' என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.