For Daily Alerts
Just In
திருப்பதி ஏழுமலையான் கோயில் அஷ்டதல பூஜையில் சாமி தரிசனம் செய்த முதல்வர் பழனிசாமி-வீடியோ!
புரட்டாசி மாத திருவிழா களைகட்டியுள்ள திருப்பதியில் ஏழுமலையானை முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
திருமலை : ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் திருப்பதி சென்ற முதல்வர் பழனிசாமி அதிகாலையில் சாமி தரிசனம் செய்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை திருப்பதி சென்றடைந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று மரியாதை செய்தனர். இதனையடுத்து அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
பின்னர் கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள வராக சாமி கோவிலுக்கு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். இதனிடையே இன்று காலையில் அவர் அஷ்டதல பாத பூஜையின்போது ஏழுமலையானை தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடித்து வந்த முதல்வர் பழனிசாமிக்கு சிறப்பு பிராதமும், பூஜிக்கப்பட்ட மலர்களும் வழங்கி தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பித்தனர்.
Comments
English summary
Tamilnadu CM Palanisamy worshipped Lord Balaji at Thirumala Tirupathy in the early morning and Devasthanam officials warm welcomed him.
Story first published: Tuesday, October 3, 2017, 15:04 [IST]