For Daily Alerts
Just In
பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை கட்டுவதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு
பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் ஆந்திர அரசு அணைக்கட்டும் பணியை தொடங்கியுள்ளதால் அதனை நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளது.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதில் ஆந்திர அரசு கூடுதலாக தண்ணீர் தேக்குவது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளது. அணையின் உயரத்தை அதிகரிப்பதும் புதிய அணைக்கட்டுவதும் சட்டத்திற்கு எதிரானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.'
தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் ஆந்திர அரசு தன்னிச்சையாக அணைக்கட்டும் பணியை தொடங்கியுள்ளதாகவுங்ம் தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.
Comments
English summary
Tamilnadu government has filed a new petition an palar dam issue. Tamilnadu government says that Andra government building a new dam in Palar is the illegal action.
Story first published: Friday, March 3, 2017, 13:52 [IST]