கடமை தவறாத தமிழக ஆளுநர் பன்வாரிலால்.. குடும்பத்தோடு வாக்களித்து பூரிப்புடன் கொடுத்த போஸ்!
நாக்பூர்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் குடும்பத்தோடு வாக்களித்தார். ஜனநாயக கடமை ஆற்றிய பின்னர், குடும்பத்தோடு வாக்களித்த விரலை காட்டி மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்தார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவரது குடும்பத்தினர் அங்குதான் வசித்து வருகிறார்கள். பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழகத்தில் வாக்குரிமை வாங்கவில்லை. தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் தான் வாக்களித்து வருகிறார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையடுத்து ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக சென்னையில் இருந்து பறந்து நாக்பூர் சென்றார்.அங்கு தனது குடும்பத்தினருடன் இணைந்து மேற்கு நாக்பூர் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Banwarilal Purohit, Governor of Tamilnadu casts his vote at a poling centre at West Nagpur constituency.#PollsWithAIR #AIRpics:Dhananjay pic.twitter.com/SceFBLCbQA
— All India Radio News (@airnewsalerts) October 21, 2019
கேரளா, மகாராஷ்டிராவில் கொட்டும் மழை.. மக்கள் முடக்கம்.. சில இடங்களில் வாக்குப்பதிவு பாதிப்பு!
அதன்பின்னர் பன்வாரிலால் புரோஹித் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து வாக்களித்த பின் மை தடவிய விரலை புன்னகைத்தபடி தூக்கி காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.