பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் சந்திப்பு!
பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் சந்தித்துள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் சந்தித்து பேசினார். .
டெல்லியில் மாநில ஆளுநர்கள் கலந்துகொள்ளும் இரண்டு நாள் மாநாடு கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்ற மாநாடு குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஆளுநர் மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றிருந்தார். ஆளுநர்கள் மாநாடு நிறைவடைந்த நிலையில் பன்வாரிலால் புரோஹித் நேற்று மத்திய அமைச்சர்களை டெல்லியில் சந்தித்தார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக நிலவரம் குறித்து விவாதித்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.