உலகில் உயரமான பட்டேல் சிலை திறப்பு.. தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
Recommended Video
காந்திநகர்: உலகின் உயரமான பட்டேல் சிலை திறப்பு விழாவில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு இன்று 143-வது பிறந்த தினம் ஆகும். இதை முன்னிட்டு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் டெல்லியில் அவரது உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
ஒற்றுமையை படேல் பறைசாற்றிய காரணத்தால் ஒற்றுமையின் சின்னம் என்ற பெயரில் அவருக்கு மிகவும் உயரமான சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை 182 அடி உயரமாகும். இது உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமையையும் பெறுகிறது.
குஜராத் மாநிலமான நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை அருகே மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள சிலையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பட்டேல் சிலை பின்னணியில் மோடியின் அரசியல் ஆணவம்.. அமெரிக்க ஊடகங்கள் கடும் விமர்சனம்!
சிலைக்கு ஒற்றுமையின் சிலை என பெயரிட்டுள்ளனர். 6.5 ரிக்டர் அளவு பூகம்பத்தையும் தாங்கும் சக்தி கொண்ட இந்த சிலை திறப்பு விழாவில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் பங்கேற்றனர்.