For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்றும் இடியுடன் மழை வெளுக்குமாம்.. இந்திய வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை வெளுத்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது.

நள்ளிரவு முதல் மழை

நள்ளிரவு முதல் மழை

நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, வளசரவாக்கம், போரூர், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்தது.

வாகன ஓட்டிகள் சிரமம்

வாகன ஓட்டிகள் சிரமம்

வளசரவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விடிய விடிய பெய்த மழையால் பல இடங்களில் சாலைகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

இடியுடன் கூடிய மழை

இடியுடன் கூடிய மழை

இந்நிலையில் தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டு மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தமாக மாறும்

காற்றழுத்தமாக மாறும்

மேலும் இந்த மேலடுக்கு சுழற்சி காற்றழுத்தமாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
Indian Meteorological center has said Tamilnadu will be getting thunder rain today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X