For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த டாக்சி டிரைவரும் 3 நண்பர்களும் - நால்வரும் கைது

Google Oneindia Tamil News

டேராடூன்: டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் டேராடூனில் ஒரு டாக்சி டிரைவர் மற்றும் டிரைவரின் மூன்று நண்பர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, அவருடைய ஆண் நண்பரும் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

27 வயதான மெளமிதா தாஸ் என்ற அப்பெண்மணி மற்றும் அவரது 24 வயதான அவிஜித் பால் என்ற ஆண் நண்பரும் அக்டோபர் 21 ஆம் தேதி அன்று தீபாவளிக்காக டேராடூன் வந்தடைந்தனர். ஆனால், இரண்டு நாட்கள் கழித்து இருவரும் காணமல் போயுள்ளனர் என்று விகாஸ்நகர் பகுதி காவல் அதிகாரியான சவப்பன் கிஷோர் சிங் தெரிவித்துள்ளார்.

நான்கு பேர் கைது:

நான்கு பேர் கைது:

இந்த நிலையில் மெளமிதா மற்றும் அவிஜித்தைக் கொன்றது தொடர்பாக டாக்ஸி டிரைவர் ராஜூ மற்றும் அவரது மூன்று நண்பர்களான பப்லு, குட்டு, குண்டன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பாலியல் வன்முறை மற்றும் கொலை, கொள்ளை ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டைகர் பால்சிலிருந்து திரும்பியபோது:

டைகர் பால்சிலிருந்து திரும்பியபோது:

அக்டோபர் 23 ஆம் தேதி அன்று அப்பெண்ணும், அவரது நண்பரும் டாக்சியில் டைகர் பால்சில் இருந்து திரும்பி வரும்பொழுது, சக்ரட்டாக் என்ற இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில், நால்வரும் சேர்ந்து மெளமிதாவையும், அவரது நண்பரையும் தாக்கியுள்ளனர்.

பால் முதலில் கொலை:

பால் முதலில் கொலை:

"முதலில் பாலை கழுத்தை நெறித்துக் கொன்ற அவர்கள் பின்னர் அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அவர்களுடைய பொருட்களை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டு, இரண்டு வெவ்வேறு இடங்களில் உடல்களை வீசியுள்ளனர்" என்று போலீஸார் கூறியுள்ளனர்.

இரு இடங்களில் உடல் வீச்சு:

இரு இடங்களில் உடல் வீச்சு:

இந்த கொலைவெறிச்சம்பவம், பாலின் உடல் உத்ரகாசியின் புரோலா பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டவுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

யமுனையில் பெண் உடல் வீச்சு:

யமுனையில் பெண் உடல் வீச்சு:

அப்பெண்ணின் உடலானது, யமுனை நதியில், லக்மண்டால் பகுதியில் வீசப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தந்தை கொடுத்த புகார்:

தந்தை கொடுத்த புகார்:

இந்த கொலை சம்பவம் பற்றி அக்டோபர் 29 ஆம் தேதி அன்று தாஸின் தந்தை வழக்கு பதிவு செய்துள்ளார். அதன்பின்னரான தேடுதலில்தான் இத்தனை விவரங்களும் வெளிவந்துள்ளது.

English summary
A Delhi-based woman tourist was allegedly raped and murdered while her male friend was killed by a taxi driver and his three accomplices here, a police official said Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X