ஃபுல் போதையில் 9-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்.. தற்கொலைக்கும் முயற்சி
Recommended Video
கர்னூல்: தன்னை காதலிக்க மறுத்த ஒன்பதாம் வகுப்பு மாணவியின் கழுத்தை இந்தி ஆசிரியர் சங்கர் பிளேடால் அறுத்ததால் கர்னூலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்னூல் பங்காருபேட்டையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக வேலை செய்பவர் சங்கர்.
அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு இந்தி ஆசிரியர் சங்கர் சில மாதங்களாக தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் சங்கரை காதலிக்க மாணவி மறுத்துவிட்டார்.
[ஏமாற்றியதை தாங்க முடியலை.. அதான் குத்தி கொன்னுட்டேன்.. ஆசிரியையை கொன்றவர் பரபர வாக்குமூலம் ]
மிரட்டல்
எனினும் மாணவியின் பின்னால் சுற்றுவதை ஆசிரியர் கைவிடவில்லை. அந்த மாணவி தன் பின்னால் வந்தால் தந்தையிடம் கூறிவிடுவதாக மிரட்டினார்.
|
கழுத்தை அறுத்த ஆசிரியர்
இதனால் ஆவேசம் அடைந்த சங்கர் இன்று காலை முழு குடிபோதையில் மாணவியின் வீட்டுக்குள் புகுந்தார். அப்போது தன்னை காதலிக்குமாறு மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொண்டார். ஆனால் மாணவி மறுத்தார்.
பிளேடால் அறுப்பு
இதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். அந்த மாணவி கெஞ்சியும் விடாமல் அந்த மாணவியின் கழுத்தை கதற கதற ஆசிரியர் சங்கர் பிளேடால் அறுத்தார்.
தற்கொலைக்கு முயற்சி
மாணவியின் கூக்குரல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டனர். அதே நேரத்தில் ஆசிரியர் சங்கர் தன்னிடம் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
மருத்துவமனையில் சேர்ப்பு
தற்கொலை முயற்சியிலிருந்து ஆசிரியரையும் மீட்ட பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து பின்னர் 2 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அதிர்ச்சி
தகவல் அறிந்து விரைந்து சென்ற கர்னூல் போலீசார் சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டுள்ளனர். மேலும் பாடம் எடுக்கும் ஆசிரியர் இப்படி மாணவி மேல் காதல் கொண்டு அவரது கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.