For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெஹல்கா தரூண் தேஜ்பால்; ஜனவரி 4 வரை காவல் நீட்டிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பனாஜி: தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் தரூண் தேஜ்பாலின் நீதிமன்ற காவலை வரும் ஜன.4ம் தேதி வரை நீட்டித்து, கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tehelka Tarun Tejpal's judicial custody extended by 12 days

பாலியல் புகார் குறித்த வழக்கில் கடந்த மாதம் 30ம் தேதி கோவா போலீசாரால் கைது செய்யப்பட்டார் தரூண் தேஜ்பால். அவரை 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்த கோவா நீதிமன்றம், பின்னர் போலீஸ் காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து அனுமதி கொடுத்தது. விசாரணை முடிந்த நிலையில், கோவா நீதிமன்றத்தில் கடந்த 11ம் தேதி தேஜ்பால் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 12 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஜாமின் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார் தேஜ்பால். ஆனால் அவரின் நீதிமன்ற காவலை மேலும் 12 தினங்களுக்கு அதாவது வரும் ஜன.4ம் தேதி வரை நீட்டித்து, கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
A local court today extended the judicial custody of Tehelka founder editor Tarun Tejpal for 12 days even as his lawyer moved a bail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X