அறையை பூட்டி விட்டு தீ வைத்த சுரேஷ்.. தப்பிக்க கூட வழியில்லாமல் எரிந்து போன விஜயா ரெட்டி
அறையை பூட்டிவிட்டு சுரேஷ் தீ வைத்து கொளுத்தி உள்ளார்
Recommended Video
அப்துல்லாபூர்மெட், ரங்காரெட்டி, தெலங்கானா: தெலங்கானா பெண் தாசில்தார் விஜயா ரெட்டி இருந்த அறையைப் பூட்டி விட்டு தீவைத்துள்ளார் சுரேஷ் என்ற தகவல் கிடைத்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மெட் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பெண் தாசில்தார் விஜயா ரெட்டி என்பவரை உயிரோடு தீவைத்து எரித்து விட்டார் சுரேஷ் என்ற விவசாயி. நில ஆவணத்தில் இருந்த தவறை சரி செய்யாமல் தாலுகா அலுவலகம் தாமதம் செய்ததே அவரது கோபத்துக்குக் காரணமாக கூறப்படுகிறது.
மொத்தமே 3 நிமிஷம்தான்..முழுசா எரிந்து கருகிட்டார்.. மின்னல் நேரத்தில் எல்லாம் முடிஞ்சு போச்சு!
அதிர்ச்சி
இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் நடந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி விலகாமல் பேசி வருகின்றனர். இதுகுறித்து ஊழியர்கள் சிலர் கூறுகையில், சம்பவத்தில் ஈடுபட்ட நபர் உள்ளே போன சில நிமிடங்களில் மேடத்தின் கதறல் சத்தம் கேட்டது. அறைக்குள்ளிருந்து புகையும் வந்தது. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.
கருகிய மேடம்
ஆனால் மேடத்தின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து மேடத்தின் டிரைவரும், மனு கொடுக்க வந்திருந்த ஒருவரும் சேர்ந்து அறையை உடைத்து திறந்து உள்ளே பாய்ந்தனர். அங்கு மேடம் முழுமையாக தீயில் எரிந்து கொண்டிருந்தார். அவர் மீது தீவைத்த நபரும் தீயில் சிக்கியிருந்தார். பதறிப் போன நாங்கள் தீயை அணைக்க எவ்வளவோ முயற்சித்தோம்.
பலன் இல்லை
மேடம் உடலில் பற்றிய தீயோடு வெளியே ஓடி வந்தார். அதற்கு மேல் அவரால் ஓட முடியவில்லை. அப்படியே கீழே விழுந்து கருகி விட்டார். தீயை அணைக்க அவர் மீது நாங்கள் துணியை போட்டோம். ஆனால் பலன் இல்லை என்றனர்.
அதிர்ச்சி
இந்த தாலுக்கா புதிதாக உருவாக்கப்பட்டதாம். அதன் முதல் தாசில்தாரே விஜயா ரெட்டிதானாம். கடந்த நான்கு வருடமாக இங்கு அவர் பணியாற்றி வந்தாராம். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் மக்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அந்தப் பகுதியே கொந்தளிப்பாக காணப்பட்டது.
முன்னெச்சரிக்கை
அரசு ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு தரத் தவறியதாக போலீஸார் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.