For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்.. டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தெ.தே எம்பிக்கள் போராட்டம்!
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஆந்திராவுகுக என எந்த அறிவிப்புகளும் இல்லை எனக் கூறி அக்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் மத்திய அரசு ஆந்திராவுக்கு அநீதி இழைத்துவிட்டதாக கடுமையாக சாடினார். இதனால் இருகட்சிகள் இடையிலான கூட்டணியில் விரைவில் முறியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னதாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Comments
parliament protest telugu desam mps special status andhra pradesh நாடாளுமன்றம் போராட்டம் தெலுங்கு தேசம் எம்பிக்கள் ஆந்திரா
English summary
Telugu Desam MP's protest in Parliament to demand special status for Andra pradesh.
Story first published: Monday, March 5, 2018, 11:42 [IST]