திருமணத்துக்கு முதல்நாள் முஸ்லிம் இளைஞருடன் 'எஸ்கேப்' ஆன இந்து பெண்...தாத்ரியில் மீண்டும் பதற்றம்
தாத்ரி: மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஸ்லிம் பெரியவர் இக்லால் அடித்துக் கொல்லப்பட்ட தாத்ரியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திருமணத்துக்கு முதல் நாள் இந்து பெண் ஒருவர் முஸ்லிம் இளைஞருடன் ஓடிப்போனதால் அக்கிராம மக்கள் கொந்தளித்து போயுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சியை ஒரு குடும்பமே சாப்பிட்டதாக சில மாதங்களுக்கு முன்னர் வதந்தி கிளம்பிவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 50 வயதான முஸ்லிம் பெரியவர் இக்லால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அதே தாத்ரி கிராமத்தில் திருமணத்துக்கு முதல் நாள்இந்து பெண், முஸ்லிம் இளைஞருடன் ஓடிப் போனதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்து பெண்ணை முஸ்லிம் இளைஞர் கடத்திச் சென்றதாக போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர். தற்போது இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.