For Quick Alerts
For Daily Alerts
Just In
தேவயானி விவகாரத்தில் பதிலடி: அமெரிக்க துணை தூதர் வெளியேற இந்தியா உத்தரவு
டெல்லி: விசா மோசடி வழக்கில் இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்தியாவிலுள்ள அமெரிக்க துணைத் தூதர் ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியாவிலிருந்து பணிப்பெண் குடும்பத்தாரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றது உள்பட தேவயானிக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை அந்த அதிகாரி முன்னின்று நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பெயர் வெளியிடப்படாத அந்த அதிகாரி இந்தியாவை விட்டு வெளியேற 48 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
The government on Friday expelled an American diplomat of a rank similar to Devyani Khobragade, our diplomat in the US who has been charged with an offence there, on a "reciprocal basis", even as she was withdrawn from the Indian embassy in Washington at the behest of the US government, allowing her to return to India.