மே.வங்கம்: மோடி பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென சரிந்த கூடாரம்- 20 பேர் படுகாயம்
பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விழுந்ததில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
Recommended Video
மிட்னாப்பூர்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென கூடாரம் சரிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்தனர்.
மேற்கு வங்கத்தின் மிட்னாப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட கூடாரம் திடீரென சரிந்து பார்வையாளர்கள் மீது விழுந்தது.
இதை கவனித்த பிரதமர் மோடி பேச்சை நிறுத்திவிட்டு பாதுகாவலர்களிடம் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தினார். 20க்கும் மேற்பட்டோர் இதில் படுகாயமடைந்தனர்.
Several injured after a portion of tent in PM Narendra Modi’s rally in Midnapore collapsed during his speech today. PM later met the injured in hospital. #WestBengal pic.twitter.com/joSiEBKFoy
— ANI (@ANI) July 16, 2018
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் தெரிவித்தார் பிரதமர் மோடி. அப்போது படுகாயமடைந்த ஒருவர் பிரதமர் மோடியிடம் தமக்கு ஆட்டோகிராப் போட்டுத் தருமாறு கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
#WATCH PM Narendra Modi tears up while talking to one of the injured people in hospital. Several were injured after a portion of a tent collapsed during PM's rally in Midnapore earlier today. #WestBengal pic.twitter.com/04AOX9CJri
— ANI (@ANI) July 16, 2018
#WATCH Moments after a portion of tent in PM Narendra Modi’s rally in Midnapore collapsed during his speech today. PM later met the injured in hospital. #WestBengal pic.twitter.com/NjvFY7d6Ay
— ANI (@ANI) July 16, 2018