For Daily Alerts
Just In
காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல்- 3 வீரர்கள் வீரமரணம்- 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில்3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது இன்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்த தீவிரவதிகள் நுழைய காத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை குப்வாரா பகுதியில் ராணுவ முகாம் மீது தீவிவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இம்மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
Comments
English summary
Terrorists have struck at an Army camp in Kupwara, Jammu and Kashmir. The attack was launched early this morning.