தேர்தல்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம்: பிரதமர் எச்சரிக்கை
டெல்லியில் இன்று நடைபெற்ற காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், சில மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களையும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலையும் சீர்குலைக்க தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டுள்ளன.
இதனால் பாதுகாப்பு அமைப்புகள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. முசாபர்நகர் கலவரம் பல உயிர்களை பலிவாங்கியது, ஆயிரக்கணக்கானோரை இடம்பெயர வைத்தது.
இதுபோன்ற உள்ளூர் கலவரங்கள் பெரிய அளவில் வெடிக்காமல் இருக்க சட்டம் ஒழுங்கு அமைப்புகள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டில், சில மாநிலங்கள் கலவரத்தால் பெரிய பாதிப்புகளை சந்தித்தன.
இதுபோன்ற சம்பவங்கள் தலைதூக்கும் போது, காவல்துறை துரிதமாக செயல்பட்டு, பிரச்னை தொடங்கும் போதே உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களை அச்சத்தில் இருந்து நீக்கி, பாதுகாக்க வேண்டும் என்றார்.