காரில் சென்ற காங். சீனியர் தலைவரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்.. காஷ்மீரில் பயங்கரம்
சம்பவ படங்களை பார்க்கும்போது, கார் கண்ணாடிகள் உடைந்துள்ளதும், அதன் வழியே குண்டுகள் ஊடுருவி குலாம் நபி பட்டேலை தாக்கியுள்ளதும் தெரிகிறது.
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் குலாம் நபி பட்டேல் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீர் மாநில காங்கிரஸ் சீனியர் தலைவர்களில் ஒருவர் குலாம் நபி பட்டேல். இவர் யாதர் பகுதியில் இருந்து புல்வாமாவுக்கு இன்று காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
ராஜ்போரா சவுக் பகுதியில் வைத்து மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் குலாம் நபி பட்டேலின் பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். எத்தனை தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
Heartfelt condolences to the family of senior Congress leader, G. N. Patel who was killed by militants today in Rajpora. Such cowardly acts achieve nothing but leave one more family devastated.
— Mehbooba Mufti (@MehboobaMufti) April 25, 2018
இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முக்தி, முன்னாள், முதல்வர் ஓமர் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்திலுள்ள படங்களை பார்க்கும்போது, கார் கண்ணாடிகள் உடைந்துள்ளதும், அதன் வழியே குண்டுகள் ஊடுருவி குலாம் நபி பட்டேலை தாக்கியுள்ளதும் தெரிகிறது.