For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு காஷ்மீருக்குள் ஊருடுவிய தீவிரவாதிகள்.. 25 வயது இளைஞரை சுட்டுக் கொன்று அட்டூழியம்

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர், போமாய் கிராமத்தில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டதில் ஒரு இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் ஐ.ஜி.பி இதுபற்றி கூறுகையில், "25 வயதான டேனிஷ் மன்சூர் என்பவர் மீது மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து அவரை, குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்." என்று தெரிவித்தார்.

Terrorists shot at a youth in Jammu Kashmir

ஜைனகீரில் உள்ள எடிபோரா போமாய் பகுதிக்கு அருகே டேனிஷ் மன்சூர் மீது இன்று மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Recommended Video

    Harbhajan, Yuvraj, Gambhir slams Afridi after his remarks about Modi

    டேனிஷ் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் என கூறப்படுகிறது. இதற்கிடையில், காவல்துறையினரும் ராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய அந்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர். தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    21 குண்டுகள் முழங்க.. முழு ராணுவ மரியாதையுடன் மதியழகன் உடல் தகனம்.. சேலம் கலெக்டர் நேரில் அஞ்சலி21 குண்டுகள் முழங்க.. முழு ராணுவ மரியாதையுடன் மதியழகன் உடல் தகனம்.. சேலம் கலெக்டர் நேரில் அஞ்சலி

    English summary
    Terrorists shot at a youth near Edipora in Sopore area of Baramulla, Jammu & Kashmir today evening. The youth was rushed to a hospital where doctors declared him brought dead: Sopore Police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X