For Daily Alerts
Just In
தமிழகத்திற்கு இயக்க அச்சம்.. 700 கர்நாடக அரசு பஸ்கள் ரத்து
பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஏப்ரல் 5ம் தேதி முழு அடைப்புப் போராட்டத்திற்கு தமிழகம் முழுதும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இன்று காலை முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. சுமார் 700 பேருந்துகள் கர்நாடகாவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழக பஸ்களும் ஒசூர் எல்லையிலேயே நிறுத்தப்படுவதால் இரு மாநிலங்கள் இடையேயான பயணிகள் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு மேல் நிலைமையை பார்த்துக்கொண்டு பஸ்களை இயக்குவது என முடிவு செய்துள்ளதாக கர்நாடக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம், இரு மாநிலங்கள் நடுவேயான ரயில் போக்குவரத்து வழக்கம்போல நடைபெற்று வருகிறது.
Comments
cauvery bundh supreme court judgement dmk காவிரி பந்த் தமிழகம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் திமுக
English summary
The buses are not operated from Karnataka to Tamil Nadu from this morning. About 700 buses have been parked in Karnataka.