For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    4 டிஎம்சி நீரை தர கர்நாடகா மறுப்பு- வீடியோ

    டெல்லி: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

    காவிரி வழக்கில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீர் வழங்கக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    உச்சநீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்தாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது. ஆனால் தண்ணீர் வழங்க முடியாது என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்தது.

    The Central Government filed affidavit in the Cauvery case

    இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு இன்று அறிக்கை தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

    இந்நிலையில் காவிரி வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. காவிரி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை பிரமாண பத்திரமாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

    அதில் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் மத்திய அரசு இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

    English summary
    The Central Government has filed the affidavit in the supreme court on the Cauvery case. The Central Government has said that all measures are being taken to implement the Supreme Court order.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X