For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலைக்கு வழியில்லை.. பாரூக் அப்துல்லா தடுப்புக் காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு!

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மிக மூத்த அரசியல் தலைவரும், மூன்று முறை முதல்வராக பதவிவகித்தவருமான ஃபாரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டிலேயே அவர் காவலில் இருப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

370வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அப்போது முதல் ஃபாரூக் அப்துல்லா காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

The detention of Farooq Abdullah, extended for another three months

ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினரும், 3 முறை முதல்வருமான அப்துல்லா, தொடர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள தன்னை, அனுமதிக்கவில்லை என்று, அரசை ஃபாருக் அப்துல்லா விமர்சனம் செய்து கடிதம் எழுதியிருந்தார். இந்த ஒரு கடிதத்தை காங்கிரஸ் எம்.பி சசி தரூர் செய்தியாளர்களிடம் வழங்கினார்.

கூலித்தொழிலாளியைக் காப்பாற்ற போராடிய பெண் நீதிபதி.. 108 வராததால் பரிதாப மரணம்!கூலித்தொழிலாளியைக் காப்பாற்ற போராடிய பெண் நீதிபதி.. 108 வராததால் பரிதாப மரணம்!

ஃபாருக் அப்துல்லா மீது Public Safety Act சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு நபரை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை சிறைச்சாலைக்குள் விசாரணை இல்லாமல் வைத்திருக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
The detention of Farooq Abdullah, Jammu and Kashmir's most senior political leader and three-time chief minister, has been extended for another three months. So he will be in custody at home, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X