காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு.. 3 சிஆர்பிஎப் வீரர்கள் பலி.. 2 காஷ்மீர் போலீசாரும் பலி!
காஷ்மீரில் தீவிரவாதிகள் - இந்திய ராணுவத்தினர் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உட்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.
ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் - இந்திய ராணுவத்தினர் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
காஷ்மீரில் தணிந்து இருந்த பதற்றம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று அதிகாலையே அங்கு தீவிரவாதிகள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து சிஆர்பிஎப் படை வீரர்கள் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து பாபாகுந்தில் உள்ள, ஹாண்ட்வாரா பகுதியில் இன்றும் மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மூன்றாவது நாளாக அந்த பகுதியில் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றது.
என்னை பாக். ராணுவம் மனரீதியாக துன்புறுத்தியது... முதல்முறையாக மனம் திறந்த அபிநந்தன்
இந்த நிலையில் அங்கு சிஆர்பிஎப் படை வீரர்கள் காஷ்மீர் போலீசுடன் சேர்ந்து தேடுதல் செய்த போது, தீவிரவாதிகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினார்கள். தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள்.
இந்த மோசமான தாக்குதலில் 3 சிஆர்பிஎப் படை வீரர்கள் பலியானார்கள். அதேபோல் 2 காஷ்மீர் போலீசார் பலியானார்கள். இந்த சம்பவம் அங்கே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அங்கு தொடர்ந்து ராணுவத்தினர், பாதுகாப்பு படையினர் இடையே சண்டை நடந்து வருகிறது. அங்கு சிஆர்பிஎப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.