பெங்களூரில் கல்லூரி மாணவி 10 நாட்கள் தொடர் பலாத்காரம்.. லாட்ஜ் உரிமையாளரும் பங்கு போட்ட கொடுமை!
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் 17 வயது கல்லூரி மாணவியை லாட்ஜ் அறையில் வைத்து பலாத்காரம் செய்த சம்பவத்தில் திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்துள்ளன.
பெங்களூர், ஒய்ட்பீல்டு பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவி, ஒய்ட்பீல்டு ரயில்வே நிலையம் அருகேயுள்ள 'கிளாசிக்கல் இன்' என்ற ஹோட்டல் லாட்ஜின் 6வது எண் அறையில் வைத்து 10 நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்டார்.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, அந்த பெண் மீட்கப்பட்டார்.
நால்வர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக ராகவேந்திரா (27), சாகர் (22), மஞ்சுராஜ் (32), மனோரஞ்சன் பண்டிட் (52) ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர். இதில் பண்டிட் அந்த ஹோட்டலின் உரிமையாளர். ராகவேந்திரா, சாகர் மற்றும் மஞ்சுராஜ் ஆகிய மூவரும், சம்பவம் நடந்த லாட்ஜ் அருகே டீ ஸ்டால் மற்றும் பால் பூத் வைத்துள்ளவர்களாகும்.
கடத்தி பலாத்காரம்
போலீசார் அந்த மாணவியிடம் சம்பவம் குறித்து விசாரித்தபோது, சக நண்பர் ஒருவர் அழைப்பதாக இவர்கள் மூவரும் அழைத்துச் சென்றதாகவும், பின்னர்தான் தான் கடத்தப்பட்டதை அறிந்ததாகவும், லாட்ஜில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
டீல் பேசிய காமுகர்கள்
அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் லாட்ஜ உரிமையாளர் பண்டிட்டுக்கு தெரியவந்துள்ளது. அவர் இதுகுறித்து போலீசில் கூறப்போவதாக மிரட்டியுள்ளார். ஆனால் அதற்கு பதிலாக இளம் பெண்ணை பலாத்காரம் செய்துகொள்ளுங்கள் என்று முக்கிய குற்றவாளி மூவரும் டீல் பேசியுள்ளனர். சபலப்பட்ட 52 வயது பண்டிட்டும், 17 வயது மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
10 நாட்கள்
லாட்ஜ் உரிமையாளருடன் சேர்ந்து மொத்தம் 4 பேரும், 10 நாட்களாக கல்லூரி மாணவியை தொடர்ந்து பலாத்காரம் செய்து தங்கள் காம வெறியை தீர்த்துள்ளனர். போலீசார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகள் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளனர்.
கல்லூரி செல்ல மறுப்பு
இதனிடையே சம்பவம் குறித்த வேதனையால், அந்த மாணவி கல்லூரி செல்வதை தவிர்த்துவிட்டாராம். அவர் கல்லூரி செல்ல விரும்பவில்லை என கூறும் மாணவியின் பெற்றோர், இதுதொடர்பாக பேச விரும்பவில்லை என கூறினர். மாணவி காணாமல் போனதாக பெற்றோர் புகார் கொடுத்த பிறகும் போலீசார் முதலில் மெத்தனம் காட்டினர். பெண்ணின் பெற்றோர் மூலம் நாளிதழில் அந்த செய்தி வெளியான பிறகு போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.