மத்தியில் பாஜக, மாநிலத்தில் மமதா ஆட்சியை அகற்ற வேண்டும்.. ராகுலுக்கு மே. வ. காங்கிரஸ் கோரிக்கை
Recommended Video
கொல்கத்தா: சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் கட்சியுடன் இடங்களை பகிர்ந்து கொள்வதற்கான "தேவையை" கருத்தில் கொண்டு தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கமிட்டி கேட்டுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றவும் , அதேபோல் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரசை ஆட்சியை விட்டு அகற்றவும் சிபிஎம் கட்சியுடன் கை கோர்ப்பது அவசியம் என மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இடதுசாரியுடன் ஒரு தேர்தல் புரிதலை ஏற்படுத்த வேண்டிய அவசியம் குறித்து ராகுலுக்கு, மேற்கு வங்க மாநிலத் தலைவர் சோமன் மித்ரா கடிதம் எழுதியுள்ளதாக, அம்மாநில காங்கிரஸ் தலைமையகமான பித்பன் பவனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்காளத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் உடன் சண்டையிடக் கூடாது என இடதுசாரி கட்சியினர் தொண்டர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், தேர்தல் கூட்டணி குறித்து சிபிஎம் பொதுக்குழுவின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் இந்த வாரம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, சீதாராம் யெச்சூரி மற்றும் ராகுல் காந்தி சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமித்ஷா சொல்றாரே.. மோடி ஏன் கப்சிப்னு இருக்கார்.. மாயாவதி கேள்வி