சீன எல்லை அருகே விமானப்படையின் சுகோய் போர் விமானம் மாயம்.. பரபரப்பு
விமான படைக்கு சொந்தமான சுகோய் ரக போர் விமானம் சீன எல்லையில் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேஜ்பூர்: விமான படைக்கு சொந்தமான சுகோய் ரக போர் விமானம் சீன எல்லையில் திடீரென மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய - சீன எல்லையில் மாயமாகியுள்ள அந்த விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அசாம் மாநிலஙம தேஜ்பூரில் இருந்து விமானப் படைக்கு சொந்த சுகோய் - 30 ரக போர் விமானம் 2 விமானிகளுடன் பயிற்சிக்காக புறப்பட்டது. புறப்பட்ட 30 நிமிடத்தில் விமானத்தின் ரேடியோ மற்றும ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டது.
தேஜ்பூரில் இருந்து வடக்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய - சீன எல்லையில் பறந்தபோது விமானம் மாயமாகியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
மேலும் விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகளின் கதி என்னவென்றும் தெரியவில்லை. போர் விமானம் நொறுங்கி விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.