For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன எல்லை அருகே விமானப்படையின் சுகோய் போர் விமானம் மாயம்.. பரபரப்பு

விமான படைக்கு சொந்தமான சுகோய் ரக போர் விமானம் சீன எல்லையில் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

தேஜ்பூர்: விமான படைக்கு சொந்தமான சுகோய் ரக போர் விமானம் சீன எல்லையில் திடீரென மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய - சீன எல்லையில் மாயமாகியுள்ள அந்த விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அசாம் மாநிலஙம தேஜ்பூரில் இருந்து விமானப் படைக்கு சொந்த சுகோய் - 30 ரக போர் விமானம் 2 விமானிகளுடன் பயிற்சிக்காக புறப்பட்டது. புறப்பட்ட 30 நிமிடத்தில் விமானத்தின் ரேடியோ மற்றும ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டது.

The Indian air force's Sukhoi-30 with two pilots onboard has lost contact with radar

தேஜ்பூரில் இருந்து வடக்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய - சீன எல்லையில் பறந்தபோது விமானம் மாயமாகியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மேலும் விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகளின் கதி என்னவென்றும் தெரியவில்லை. போர் விமானம் நொறுங்கி விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

English summary
The Indian air force's Sukhoi-30 with two pilots onboard has lost contact with radar. The fighter jet went missing soon after getting airborne from Tezpur. initial reports suggested that radio and radar contact was lost 60 kilometres north of Tezpur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X