பெண்கள் நலனில் மத்திய அரசு உறுதி.. முத்தலாக் முறையை ஒழித்தே தீருவோம்: மோடி உரை
Recommended Video
டெல்லி: முஸ்லீம் பெண்களுக்கு பெரும் அநீதியாக அமைந்தது முத்தலாக் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.
செங்கோட்டையில் சுதந்திர தின உரை நிகழ்த்தியபோது மோடி மேலும் கூறியதாவது: முத்தலாக் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிலர் எதிர்த்தாலும் முஸ்லீம் பெண்களுக்கு நியாயம் கிடைக்க செய்வோம்.
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக அதிகப்படியான பெண் அமைச்சர்கள் இந்த அரசில் பதவி வகிக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் ஒரே நேரத்தில் பெண் 3 நீதிபதிகள் பணியாற்றுகிற்றுகிறார்கள்.
பலாத்கார மனோநிலை முடிவுக்கு வர வேண்டும். மத்திய பிரதேச மாநிலத்தில் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளது விரைவு நீதிமன்றம். எனவே மக்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. சட்டமே உயர்ந்தது. இவ்வாறு பேசிய நரேந்திர மோடி, வந்தே மாதரம் கூறி தனது சுதந்திர தின உரையை நிறைவு செய்தார்.