அணு ஆயுத போர்க்கப்பல்.. அந்தமானுக்கு வருகிறது அமெரிக்காவின் "கில்லர் ஷிப்".. இந்தியா மாஸ்டர் பிளான்!
அந்தமான்: தென் சீன கடல் எல்லையில் ரோந்து பணிகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் போர் கப்பல்கள் உடன் இந்தியாவும் போர் பயிற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த போர் கப்பல்கள் விரைவில் அந்தமான் நிக்கோபார் கடல் பகுதிக்கு வரும் என்று கூறுகிறார்கள்.
Recommended Video
தென் சீன கடல் எல்லையில் தற்போது அமெரிக்கா - சீனா இடையே மோதல் நிலவி வருகிறது. இதனால் அமெரிக்கா அங்கே போர் கப்பல்களை நிறுத்தி உள்ளது. அமெரிக்காவின் நிமிட்ஸ் போர் கப்பல் மற்றும் ரொனால்ட் ரீகன் போர் கப்பல் இரண்டும் அங்கு ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவின் போர் கப்பல்களை சமாளிக்கும் வகையில் சீனாவும் இங்கே போர் கப்பல்களை இறக்கி உள்ளது. அதேபோல் ஏவுகணைகளையும் அங்கே சீனா களமிறக்கி இருக்கிறது.
இந்தியா திட்டம்
இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்காவின் போர் கப்பலான நிமிட்ஸ் போர் கப்பல் அந்தமான் நிக்கோபார் பகுதிக்கு வர இருப்பதாக கூறுகிறார்கள். அந்தமான் கடல் பகுதியில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து போர் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது என்று கூறுகிறார்கள். உலகிலேயே நிமிட்ஸ் போர் கப்பல்தான் மிகப்பெரிய அணு ஆயுத போர் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தமான் அனுப்ப திட்டம்
அதன்படி தென் சீன கடல் எல்லையில் இருந்து இந்த கப்பலை அப்படியே அந்தமான் நிக்கோபார் பகுதிக்கு திருப்ப அமெரிக்கா ஆலோசனை செய்து வருகிறது என்று கூறுகிறார்கள். சில நாட்களுக்கு முன்புதான் மலாக்கா பகுதி வழியாக நிமிட்ஸ் போர் கப்பல் இந்திய கடல் பகுதிக்கு வந்து சென்றது. மலேசியா, இந்தோனேசியா அருகே அவ்வவ்போது வந்து செல்லும் இந்த கப்பல் அந்தமான் வர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
அந்தமான் பயிற்சி
அந்தமானில் அடுத்தடுத்து இந்தியா போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தமானில் கடந்த ஜூன் தொடக்கத்தில் ஜப்பான் உடன் இந்தியா போர் பயிற்சிகளை செய்தது. அந்தமான் அருகே இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா - ஜப்பான் பயிற்சிகளை மேற்கொண்டது. அதன்பின் இரண்டு நாட்கள் முன்பு இந்தியா தனியாக அந்தமான் - நிக்கோபார் பகுதியில் பயிற்சியை மேற்கொண்டது.
அடுத்த திட்டம்
வரும் நாட்களில் ஆஸ்திரேலியா உடன் இந்திய பெருங்கடல் பகுதியிலும் இதேபோல் இந்தியா பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது என்று கூறுகிறார்கள். இந்தியா - ஜப்பான் - ஆஸ்திரேலியா ஒன்றாக சேர்ந்து போர் பயிற்சியை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கான ஆலோசனை நடந்து வருகிறது.
அமெரிக்கா உள்ளே வந்தது
இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்கா இதில் உள்ளே வந்துள்ளது. அதன்படி குவாட் (QUAD) நாடுகள் எனப்படும் ஆஸ்திரேலியா, ஜப்பான் , இந்தியா, அமெரிக்கா ஒன்றாக சேர்ந்து பயிற்சியை மேற்கொள்ள போகிறது. இதற்காகவே அமெரிக்கா தனது கில்லர் போர்க்கப்பல் என்று அழைக்கப்படும் நிமிட்ஸ் போர் கப்பலை அனுப்புகிறது. அந்தமான் கடல் பகுதியை பாதுகாப்பதன் மூலம் சீனாவின் அத்துமீறலை அங்கே தடுக்கலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது.