ஆந்திராவில் நடுரோட்டில் பற்றி எரிந்த இளம்பெண் உடல்: பொதுமக்கள் அதிர்ச்சி
Recommended Video
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் எரிந்து கொண்டிருந்த நிலையில் இளம் பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்து எரிக்கப்பட்ட இளம் பெண்ணின் உடலை எரிந்து கொண்டிருந்த நிலையில் போலீசார் இன்று கைப்பற்றினர்.
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது கொத்தப்பள்ளி கிராமம். நரவ செல்லும் வழியில் சாலை ஓரத்தில் இளம் பெண்ணின் உடல் இன்று அதிகாலை எரிந்து கொண்டிருந்தது.
இன்று காலை அந்த வழியாக நடை பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் , அங்கு பெண்ணின் உடல் நெருப்பில்கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெண்டுருத்தி காவல் நிலையத்திற்கு இளம் பெண் உடல் எரிந்து கொண்டிருப்பது பற்றி உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தீயை அணைத்து அந்த பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.