ஜம்மு காஷ்மீர் எல்லையில் எந்த ராணுவ தாக்குதலும் நடக்கவில்லை.. இந்திய ராணுவம் விளக்கம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லையில் இந்திய ராணுவம் தாக்கியதாக வெளியாகும் செய்திகளுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இணையத்தில் இது தொடர்பாக வெளியான செய்திகளுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள், 4 பொது மக்கள் பலியானார்கள்.
"ஒத்துழைப்பு வேண்டும்".. கொரோனா வேக்சினுக்காக சமாதானத்திற்கு முயலும் சீனா.. கெத்து காட்டும் இந்தியா!
எப்படி
இதில் 8 பாகிஸ்தான் வீரர்கள் பலியானார்கள். ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் சில தீவிரவாத அமைப்புகளும் தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. நேற்று புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பொது மக்கள் படுகாயம் அடைந்தனர்.
இன்று
இந்த நிலையில் இன்றும் நக்ரோட்டா பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இதனால் மிகப்பெரிய ராணுவ ஊடுருவல் முறியடிக்கப்பட்டது. குளிர்காலத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவமும் அந்நாட்டு தீவிரவாதிகளை இந்தியாவிற்கு அனுப்ப முயல்வதாக புகார் எழுந்துள்ளது.
தகவல்
இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இந்தியா பயன்படுத்தி வருகிறதுஎன்று தகவல்கள் வந்தது. ஆனால் ஜம்மு காஷ்மீர் எல்லையில் எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
நடக்கவில்லை
எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவவில்லை என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. எல்லையில் இந்திய ராணுவம் தாக்கியதாக வெளியாகும் செய்திகளுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.