For Daily Alerts
Just In
திருப்பதி அருகே செம்மரம் வெட்டி கடத்த வந்ததாக 13 தமிழர்கள் கைது
திருப்பதி அருகே செம்மரம் வெட்டிக் கடத்த வந்ததாக 13 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி: செம்மரம் வெட்டிக் கடத்த வந்ததாக 13 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர வனப்பகுதியில் அதிகளவு செம்மரக்கட்டைகள் உள்ளன. இந்த செம்மரங்களை முறைகேடாக வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து செம்மரம் வெட்டுபவர்களை கண்காணிக்க அம்மாநில போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் திருப்பதி அருகே ஆஞ்சநேயபுரத்தில் செம்மரம் வெட்டி கடத்த வந்ததாக 13 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் லாரியில் கடத்தி வந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 33 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 13 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
Comments
English summary
Thirteen Tamils were arrested in Tripathi to cut the red sandal wood. Rupees 50 lakh worth red sandal wood rescued from them.
Story first published: Friday, February 16, 2018, 9:22 [IST]