ஒரே நேரத்தில் பெண் போலீஸ் உள்பட 140 பேருடன் கள்ளக்காதல்... டைரி போட்டு பராமரித்த உ.பி.காரர்!
லக்னோ: உத்தர பிரசேத்தை சேர்ந்த ஒருவர் பெண் போலீஸ் அதிகாரி உள்பட 140 பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
உலக அரங்கில் இந்தியா என்றால் கலாச்சாரம், பண்பாடு மிக்க நாடு என்று கூறுகிறார்கள். திருமண பந்தம் என்பது புனிதமானது என்று கருதிய காலம் மலையேறி வருகிறது. நாட்டில் கள்ளத்தொடர்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தான் இந்த அதிர்ச்சிகரமாக செய்தி வெளியாகியுள்ளது.
கள்ளத்தொடர்பு
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி நகரை சேர்ந்தவர் ரமேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஒரே சமயத்தில் பெண் போலீஸ் அதிகாரி உள்பட 140 பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.
போலீசில் புகர்
ரமேஷ் 140 பெண்களுடன் உல்லாசமாக இருந்தது குறித்து அவரது மகள் ரோஷனிக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த ரோஷினி நேராக காவல் நிலையத்திற்கு சென்று தந்தை மீது புகார் அளித்தார்.
ரகசிய டைரி
ரமேஷ் தனது கள்ளக்காதலிகளின் பெயர்களை ஒரு டைரியில் எழுதி அதை வீட்டில் யாருக்கும் தெரியாமல் பத்திரமாக மறைத்து வைத்துள்ளார். அந்த டைரியை ரோஷினி கண்டுபிடித்துவிட்டார்.
விபரங்கள்
டைரியில் கள்ளக்காதலிகளின் பெயர்கள் மட்டும் அல்ல அவர்களை எந்த தேதியில் எந்த இடத்தில் பார்த்தார், எத்தனை முறை அவர்களுடன் உறவு கொண்டார் உள்ளிட்ட பல கருமம் பிடித்த விபரங்களையும் எழுதி வைத்துள்ளார் ரமேஷ் என அவரின் மகள் தெரிவித்துள்ளார்.