கேரளா அரசுக்கும் கடும் நெருக்கடி- பிற மாநில தொழிலாளர்கள் சாலைகளில் குவிந்ததால் பதற்றம்
கோட்டயம்: கேரளா அரசுக்கு கடும் நெருக்கடி தரும் வகையில் பிற மாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் சாலைகளில் ஒன்று திரண்டிருப்பதால் கோட்டயத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தத்தளித்து வருகின்றனர்.
டெல்லியில் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான பிற மாநிலத்தவர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநில முதல்வர்கள் சிறப்பு பேருந்துகளை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் டெல்லியில் இருந்து தொடர்ந்து பிற மாநிலத்தவர் வெளியேறி வருகின்றனர்.
Thousands of migrant workers gather in a town in Kottayam in Kerala. Want to return to home states of Bengal, Bihar and Chhattisgarh. Say they haven’t eaten for 2-3 days pic.twitter.com/NLIYMBSKBf
— Padmaja joshi (@PadmajaJoshi) March 29, 2020
இந்நிலையில் திடீரென கேரளா மாநிலம் கோட்டயத்தில் பல்லாயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் இன்று சாலைகளில் குவிந்தனர். தங்களுக்கு போதுமான உணவு 2 நாட்களாக கிடைக்கவில்லை; அதனால் தங்களை சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது கேரளா அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.