For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் மோடியை தீவிரவாதிகள் குறி வைக்கலாம்.. உளவுத்துறை எச்சரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து அதிகம் என பாதுகாப்பு ஏஜென்சீக்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் தெரிவித்துள்ளன.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு ஆண்டுதோறும் டெல்லியில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பிரதமர் குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் இருந்து உரையாற்றுவது வழக்கமாக உள்ளது. ஆனால் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு கண்ணாடி கூண்டுக்கு வெளியே நின்று தான் உரையாற்றி வருகிறார்.

Threat to PM’s life higher this Independence day

இந்நிலையில் இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகவும், மோடியின் உயிருக்கு ஆபத்து அதிகம் என்றும் பாதுகாப்பு ஏஜென்சீக்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் தெரிவித்துள்ளன.

மேலும் மோடியை சுதந்திரன தின கொண்டாட்டத்தின்போது குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று உரையாற்றுமாறு வலியுறுத்துங்கள் என பாதுகாப்பு ஏஜென்சீக்கள் தோவலை கேட்டுக் கொண்டுள்ளன.

ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கொய்தா ஆகிய தீவிரவாத அமைப்புகள் ராணுவம் மற்றும் காவல் நிலையங்களை தாக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Security agencies have insisted that PM Modi should give his independence day speech within bullet proof enclosure as threat to his life is higher.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X