ராஜஸ்தானில் நின்று கொண்டிருந்த ரயிலின் 3 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து நாசம்
ஜோத்பூர்: ராஜஸ்தானில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஜெய்சல்மர்-டெல்லி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் ரயில் நிலையத்தில் ஜெய்சல்மர்-டெல்லி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்தது. ரயில் டெல்லிக்கு கிளம்ப தயாராக இருந்த நிலையில் மதியம் 3 மணிக்கு திடீர் என எஸ்1, எஸ்2 மற்றும் எஸ்3 ஆகிய ஸ்லீப்பர் பெட்டிகளில் தீப்பிடித்தது.

உடனே இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். நின்று கொண்டிருந்த பெட்டிகளில் எப்படி தீப்பிடித்தது என்று தெரியவில்லை.
நல்லவேளையாக இந்த விபத்தில் பயணிகள் யாரும் காயம் அடையவில்லை. தீ விபத்தில் எஸ்2 பெட்டி முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. எஸ்1 மற்றும் எஸ்3 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. யாராவது சேட்டைக்காரர்களின் வேலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து வேறு பெட்டிகள் வரவழைக்கப்பட்டு ரயில் தாமதமாக கிளம்பிச் சென்றது.












Click it and Unblock the Notifications