For Daily Alerts
Just In
அஸ்ஸாமில் ராணுவம்- தீவிரவாதிகள் இடையே மோதல்: 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
அஸ்ஸாமில் தீவிரவாதிகளுடனான மோதலில் 3 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.
குவஹாத்தி: அஸ்ஸாமில் ராணுவம் மற்றும் உல்பா தீரவாதிகள் இடையேயான மோதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அஸ்ஸாலிம் உல்ஃபா அமைப்பு தனிநாடு கோரி போராட்டம் நடத்தியது. இந்த அமைப்பு 1990களில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. இருப்பினும் கொரில்லா போர் முறையில் ராணுவத்தினர் மீது அவ்வப்போது உல்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இன்று தின்சுகியா மாவட்டத்தில் உல்பா தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அங்கு இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்க்சி சண்டை நீடித்து வருகிறது.
அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments
English summary
Three army jawans lost their lives in an encounter between security forces and suspected ULFA terrorists in Assam.
Story first published: Saturday, November 19, 2016, 11:27 [IST]