For Daily Alerts
Just In
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு.. 3 இந்திய வீரர்கள் வீரமரணம்!
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
கேரி: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஜோரி மாவட்டம் கேரி பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
லோக்சபாவில் பேசிய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 881 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக கூறினார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Three soldiers including an officer were killed and one other injured in the ceasefire violation by Pakistan at the Keri area of Jammu and Kashmir.
Story first published: Saturday, December 23, 2017, 18:25 [IST]