For Daily Alerts
Just In
மணிப்பூர் ஏரியில் 2ம் உலகப் போரில் ஈடுபட்ட விமானங்கள் கண்டெடுப்பு
இம்பால்: 2-வது உலகப் போரின் போது தாக்குதலில் ஈடுபட்ட மூன்று போர் விமானங்கள் மணிப்பூரில் உள்ள லோக்டக் ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1944ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடந்த போது தாக்குதலில் ஈடுபட வந்த ஜப்பான் போர் விமானங்களை பிரிட்டிஷ் படையினர் சுட்டு வீழ்த்தியதில், அந்த விமானங்கள் ஏரியில் விழுந்துள்ளன.
மற்றொரு போர் விமானம் பிரிட்டிஷ் படையுடையது. விமானக் கோளாறு காரணமாக பிரிட்டிஷ் படை விமானமும் இந்த ஏரியில் விழுந்து மூழ்கியுள்ளது.
இரண்டாம் உலகப்போர் பிரசார அமைப்பும், பர்மா பிரசார சமூகமும் இணைந்து இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. இதற்கு பலனாக ஏரியில் மூழ்கிய போர் விமானனங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
English summary
Three aircrafts of the World War II era have been found in Manipur 's Loktak Lake after they went missing during the conflict.
Story first published: Thursday, October 9, 2014, 12:03 [IST]