For Daily Alerts
Just In
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் திபெத் அகதிகள்
தர்மசாலா: இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக திபெத் அகதிகள் வாக்குரிமை பெற்று வாக்களிக்க உள்ளனர்.
திபெத்தில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அகதிகளாக இந்தியாவில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக உள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு அனைத்துவிதமான உரிமைகளையும் அள்ளி வழங்கியிருக்கிறது.
இதன் ஒரு அம்சமாக தற்போது இந்திய குடிமக்களுக்குரிய வாக்குரிமையையும் கூட திபெத் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் தர்மசாலாவில் வாழ்ந்து வரும் திபெக் அகதிகளுக்கு இந்திய வாக்குரிமை கிடைத்துள்ளது.
நடப்பு லோக்சபா தேர்தலில் திபெத் அகதிகளும் வாக்களிக்க உள்ளனர். இந்திய வரலாற்றில் வெளிநாட்டு அகதிகள் வாக்குரிமை பெற்று வாக்களிப்பது இதுவே முதல் முறையாகும்.
Comments
English summary
A number of Tibetans living at Dharamshala in Himachal Pradesh will be able to vote. It would be for the first time in the Indian election history
Story first published: Monday, April 28, 2014, 11:03 [IST]