புலியுடன் மோதும் சோம்பல் கரடி.. அபூர்வ வீடியோ.. கடைசியில் பயந்தது யாருன்னு நீங்களே பாருங்க!
ஜெய்ப்பூர்: புலியுடன் கரடி மோதும் அபூர்வ வீடியோ ஒன்றை ஜார்க்கண்ட் ராஜ்ய சபா எம்பி பரிமல் நத்வானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சாவை மாதோபூர் அருகே அமைந்திருக்கிறது ரன்தம்போர் தேசிய வனவிலங்கு பூங்கா. இது 1334 சதுர கிலோமீட்டர் பரப்பளரவில் அமைந்துள்ளது.
இந்த பூங்காவில் இந்திய சிறுத்தைகள், வங்கத்து புலிகள், காட்டுப்பன்றி, ஹைனா, சோம்பல் கரடி, சாம்பல் லாங்கூர், முதலை, யானை உள்பட பல்வேறு வன விலங்குகள் வாழ்கின்றன.
ஆவேசமாக சண்டை
இந்த பூங்காவில் சோம்பல் கரடியை புலி ஒன்று தாக்க முயன்றது. இரண்டு மோதிக்கொள்ளும் வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் தாக்க வரும் புலிகளை ஆவேசமாக சண்டை போட்டு விரட்டுகிறது.
பயந்த புலி
இதனால் புலிகள் பயந்து கொஞ்சம் பின்னே செல்கிறது. இருந்தாலும் புலி அப்படியே கரடியின் செயலை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறது.
அதிசயமானவை
இநத வீடியோவைத்தான் ஜார்க்கண்ட் ராஜ்ய சபா எம்பி பரிமல் நத்வானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் ராஜஸ்தான் வனவிலங்கு பூங்காவில் கரடியை தாக்க வருகிறது ஒரு புலி. அந்த புலிக்கு தான் கொஞ்சுமும் சளைத்தவன் இல்லை என்பது போல் கரடியும் தைரியமாக சண்டை போடுகிறது. வனவிலங்குகள் ஆச்சயர்மும் அதிசயமும் நிறைந்தவை என்று கூறியுள்ளார்.