திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதிய கூட்டம்... ஒரே நாளில் 2 கோடி ரூபாய் காணிக்கை - வீடியோ
திருப்பதி ஏழுமல்யான் கோயிலில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர் கூட்டம் அலைமோதியது. மேலும் ஒரே நாளில் 2 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக இருந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் அங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. காலையில் இருந்தே மக்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வர ஆரம்பித்தனர். இதனால் சுவாமி தரிசனத்துக்கு பத்து மணிநேரம் காத்திருந்தனர்.
ஒரே நாளில் இத்தனை கூட்டம் குவிந்தும் அவர்கள் அனைவரும் சிறப்பாக சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் என பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் வந்திருந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நேற்று சுவாமி உண்டியலில் இரண்டு கோடி ரூபாய்க்கும் மேலாக காணிக்கை கிடைத்திருந்தது. பக்தர்கள்கூட்டம் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.