அட்சய திரிதியை… திருப்பதி ஏழுமலையான் தங்க நாணய விற்பனை படுஜோர்
திருப்பதி: அட்சய திரிதியை நாளை முன்னிட்டு செவ்வாய்கிழமையன்று திருப்பதியில் ஏழுமலையான், பத்மாவதி தாயார் உருவம் பொறித்த தங்க, வெள்ளி நாணயங்கள் விற்பனை படு ஜோராக நடைபெற்றது.
அட்சய திரிதியை நாளன்று தங்கம் வாங்கினால் அது பலமடங்கு பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. நகைக்கடைகள் மட்டுமல்லாது திருப்பதி திருமலை தேவாஸ்தனம் சார்பில் தங்க நாணய விற்பனை நடைபெற்றது.
10 கிராம் நாணயம்
காலை 6 மணிக்கு தொடங்கிய விற்பனை மாலை 6 மணிவரை நடைபெற்றது. இதில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நாணயங்கள் விற்றன. 10 கிராம் தங்க நாணயம் ரூ.26,020-க்கும், 5 கிராம் தங்க நாணயம் ரூ.13,225க்கும் விற்பனை செய்யப்பட்டன.
பக்தர்கள் ஏமாற்றம்
2 கிராம் தங்க நாணயம் ரூ.5,485. இந்த நாணயம் இல்லை என்று கூறியதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வெள்ளி நாணயம் விற்பனை
10 கிராம் வெள்ளி நாணயம் ரூ.850க்கும் 5 கிராம் வெள்ளி நாணயம் 475க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஏழைகளுக்கு கிடைக்காதோ
3 கிராம் வெள்ளி நாணயம் விற்பனை செய்யப்படாத காரணத்தால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.