For Daily Alerts
Just In
சூரிய கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9ம் தேதி தரிசனம் ரத்து
திருப்பதி : சூரிய கிரகணத்தை முன்னிட்டு, திருமலை, ஏழுமலையான் கோவில், 8 மணி நேரம் மூடப்பட உள்ளது. மார்ச், 9 காலை, 5:34 மணி முதல், 9:08 மணி வரை, சூரிய கிரகணம் நடைபெற உள்ளது.
கிரகண காலத்திற்கு, 6 மணி நேரத்திற்கு முன், கோவில் நடை சாத்தப்படும் என்பதால், மார்ச், 8 இரவு, 8:30 மணிக்கு, ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட உள்ளது.
சூரிய கிரகணம் முடிவுற்ற பின், கோவில் முழுவதும் சுத்தம் செய்து, புண்ணியாவசனம் நடத்திய பின், கோவில் நடை திறக்கப்படும். அதன் பின், பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இதையொட்டி, மார்ச், 9 காலை நடைபெற இருந்த, ஸஹஸ்ர கலசாபிசேகம் ரத்து செய்யபட்டுள்ளது.
தோமாலை, அர்ச்சனை, சுப்ரபாதம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள், அன்றைய தினம், ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Comments
English summary
Tirupati temple will remain shut during solar eclipse says sources.
Story first published: Friday, March 4, 2016, 8:22 [IST]