For Daily Alerts
Just In
சுற்றுலா வரும் பக்தர்கள் வசதிக்காக நாகை, வேளாங்கன்னி ரயில் நிலையங்களில் கூடுதல் வசதி
டெல்லி: நாகப்பட்டினம், வேளாங்கன்னி உள்ளிட்ட ஆன்மீக சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள நகரங்களில் ரயில் பயணிகளுக்குகூடுதல் வசதிகள் செய்து தரப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று 2016-17ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் உரையின்போது அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: அஜ்மீர், அமிர்தசரஸ், பிகார் ஷரிப், செங்கனூர், துவாரகை, கயா, ஹரித்துவார், மதுரா, நாகப்பட்டினம், நான்டட், நாசிக், பாலி, பரசந்த், பூரி, திருப்பதி, வேளாங்கண்ணி, வாரணாசி மற்றும் வாஸ்கோ ஆகியவை பல்வேறு மதப்பிரிவினரின் வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள நகரங்கள்.
இந்த நகரங்களுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் கூடுதல் வசதிகள் ஏர்படுத்தி தரப்படும். அந்த ரயில் நிலையங்கள் அழகுபடுத்தப்படும். இவ்வாறு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
Comments
English summary
Indian railway intend to take up on priority the provision of passenger amenities and beautification on stations at pilgrimage centres including Ajmer, Amritsar, Bihar Sharif, Chengannur, Dwarka, Gaya, Haridwar, Mathura, Nagapattinam, Nanded, Nasik, Pali, Parasnath, Puri, Tirupati, Vailankanni, Varanasai and Vasco.