மே.வங்கத்தில் ராம நவமி நாளில் ரத யாத்திரை: திரிணாமுல் காங். அதிரடி அறிவிப்பு
திரிணாமுல் காங்கிரஸ் வரும் 25-ல் ரத யாத்திரை நடத்துகிறது.
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ராம நவமி நாளான வரும் 25-ந் தேதியன்று திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ரத யாத்திரை நடத்தப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கட்ட வேண்டும்; இந்தியாவில் ராம ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த ரத யாத்திரை பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள், போராட்டங்களுக்கு இடையே ரத யாத்திரையை தமிழக அரசு அனுமதித்திருக்கிறது. இந்த நிலையில் இந்துத்துவா அமைப்புகளுக்கு பதிலடி தரும் வகையில் அவர்கள் பாணியிலேயே மமதா பானர்ஜி அதிரடியாக ரத யாத்திரையை அறிவித்திருக்கிறார்.
அதுவும் ராம நவமி நாளான வரும் 25-ந் தேதியன்று மேற்கு வங்க மாநிலம் முழுவதும் ரத யாத்திரை நடத்தப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.