For Daily Alerts
Just In
டெல்லி டோல் பூத்தில் மர்ம நபர்கள் கொள்ளை- 2 ஊழியர்களைக் கொலை செய்த கொள்ளையர்கள்
டெல்லி: டெல்லியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி ஒன்றில் 2 ஊழியர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லியின் பதர்பூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை காசாளர் மற்றும் பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இருவர் உள்ளே இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காசாளர் மஹிபால் மற்றும் பாதுகாவலர் மோகன் ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீசார் துப்புத் துலக்கி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
English summary
cashier and a security guard of a toll plaza were on Sunday shot dead by two assailants in a suspected robbery bid in southeast Delhi's Badarpur area, police said.
Story first published: Sunday, February 28, 2016, 17:08 [IST]