For Quick Alerts
For Daily Alerts
Just In
இமாச்சலப் பிரதேசத்தில் மலைரயில் பெட்டி தடம் புரண்டு விபத்து- 2 வெளிநாட்டினர் பலி; 20 பேர் படுகாயம்
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் மலை ரயில் பெட்டி தடம் புரண்ட விபத்தில் 2 வெளிநாட்டினர் பலியாகி உள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் கல்கா- ஷிம்லா வழித்தடத்தில் இந்த மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று இந்த மலைரயிலின் பெட்டி திடீரென தடம் புரண்டது.
இந்த சம்பவத்தில் 2 வெளிநாட்டின் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக மும்பை சென்று கொண்டிருந்த தூரந்தோ ரயில் பெட்டிகள் இன்று காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
A toy train running between Kalka and Simla in Himachal Pradesh has derailed.